திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது! - ஜே.பி . நட்டா குற்றச்சாட்டு
Oct 14, 2025, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது! – ஜே.பி . நட்டா குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 12, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன என்றும், எமர்ஜென்சி காலம் போல காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சவுகார்பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மிண்ட் பகுதியில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,

“தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மிக மோசமானது. ஆளும் திமுக அரசுக்கு அறிவும் இல்லை. திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை, ஜனநாயகம் இல்லை. நான் வரும் வழியில் எல்லாம் கடைகள் மூடப்பட்டிருந்தன. திமுகவினர் மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மோசமான தலைவரால் சீரழிகிறது.

நான் இங்கு வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. சென்னையில் இன்றைய தினம் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால், இது நீண்ட காலம் இருக்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும். ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது. ஊழல் அரசை அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருந்து வருகிறது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

மொரீஷியஸ், இலங்கையில் யு.பி.ஐ சேவை : இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

தேசிய கீதம் இசைக்கப்படாததால் இரு நிமிடம் மட்டுமே சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies