புரோ ஹாக்கி லீக் தொடரில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
5-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில், இரு அணிகளும், 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை பெற்றது. இதனை அடுத்து, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் இந்திய அணி முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. ஆனால், நெதர்லாந்து அணியோ கிடைத்த 4 வாய்ப்புகளில், 2 கோல் மட்டுமே அடித்தது. மற்ற இரண்டு ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தி அசத்தினார்.
இறுதியில், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. வரும் 15-ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.