சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Nov 1, 2025, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 12, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் யாத்திரை 200-வது தொகுதி நிறைவையொட்டி, சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டாதமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருகிறோம். மக்கள் மனதில் நமது நல்லாட்சியின் அருமை தெரிகிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம். தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக. இந்த புண்ணிய பூமியில் இதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இதில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் யாத்திரை, ஏன் வேள்வியும் கூட.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம், பிரதமர் நரேந்திர மோடி பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. ஆன்மிகம் வளர்ந்து விட்டால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தந்து விட்டால் இந்த பாரதம் முழுமை அடையும்.

தமிழகத்தில் பொய் பேசி ஆட்சி நடத்துகிறார்கள். சமீபத்தில் சென்னையில் வந்த வெள்ளமே அதற்கு சான்று. ரூ.4 ஆயிரம் கோடி, ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்தோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் மக்கள் துன்பப்பட்டதை மறக்க முடியுமா? இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பா.ஜனதா எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள்.

சென்னை நகரம் பா.ஜனதா பக்கம் வரவேண்டும். சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். புதிய சென்னை உருவாக்க வேண்டும். இன்றைக்கு எனது யாத்திரையின் மூலம் 200-வது தொகுதிக்கு வந்திருக்கிறேன். 234-வது தொகுதியில் இந்த யாத்திரையை நிறைவு செய்யும்போது ஒரு புதிய சரித்திரம் பிறக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Tags: k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் வெற்றி!

Related News

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies