ஐபிஎல் 2024-யில் ஆர்.சி.பி. கோப்பையை வென்றால், அது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தருணமாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் வீரரை இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தாண்டு போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரீமியர் லீக் தொடர் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது, இந்த 16 ஆண்டுகளும் போட்டியில் விளையாடி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணி என்றால் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்றே சொல்லலாம்.
இதில் அனைவரிடமும் கவனம் பெற்ற அணி என்றால், அது பெங்களூர் அணி ஏனெனில் பெங்களூரு அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி விளையாடுகிறார். அதுமட்டும் மின்று கிறிஸ் கெயில் இந்த அணியில் முன்னாள் வீரராக விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்களை குவித்த அணியாகவும் இதுவரை குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் திகழ்வது பெங்களூரு அணி தான்.
ஒரு தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி இறுதியில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் அணி தான் பெங்களூரு. எவ்வளவு முயற்சி செய்து இந்த 16 வருடங்களில் பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் ஐபிஎல் 2024-யில் ஆர்.சி.பி. கோப்பையை வென்றால், அது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தருணமாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் வீரரை இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ஆர்.சி.பி. மற்றும் அவர்களின் ரசிகர்களைப் போன்ற ஒரு உரிமையாளர் – ரசிகர் உறவை நான் பார்த்ததில்லை. அவர்கள் உலகம் முழுவதும் மிகவும் விசுவாசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை.
2016 கோலிக்கும், ஆர்.சி.பி அணிக்கும் மிகவும் சிறப்பான தொடர். வெற்றி பெறவேண்டிய வருடம் என்று நினைத்தேன். விராட் கோலியும், ஆர்.சி.பி.யும் பட்டத்தை வென்றால், அது ஆர்.சி.பி. வரலாற்றில் மட்டுமல்ல, ஐ.பி.எல். வரலாற்றில் மிகப்பெரிய தருணமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.