2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது! - அனுராக் சிங்
Jul 25, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது! – அனுராக் சிங்

Web Desk by Web Desk
Feb 13, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக வானொலி விதிமுறை மாற்றங்களால் இதன் எண்ணிக்கை விரைவில் 480-லிருந்து 1000-ஆக மாறும் எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றிய  மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,

வானொலியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி “மனதின் குரல்” நிகழ்ச்சியை தொடங்கி கோடானுகோடி மக்களுடன் உரையாடி வருகிறார் என்றும், அவர்களின் மனஉணர்வுகளை அறிந்து வருகிறார் என்று கூறினார்.

சமூக வானொலி என்பது மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது என்றும், குரலற்றவர்களின் குரலாக இருப்பதோடு உள்ளடக்க விஷயங்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது என்று தெரிவித்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

சமூக வானொலி திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாய் 2002-ல் ஒப்புதல் அளித்தார் என்பதையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 2004-ம் ஆண்டு முதலாவது சமூக வானொலி அமைக்கப்பட்டது என்பதையும் திரு அனுராக் தாக்கூர் நினைவுகூர்ந்தார். 2014 வரை நாட்டில் 140 ஆக இருந்த சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை 2024-ல் 481 ஆக அதிகரித்துள்ளது என்றும், இவற்றில் தென் மண்டலத்தில் மட்டும் 117 சமூக வானொலி நிலையங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

சமூக வானொலி நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு அமைப்பு ஒன்றுக்கும் அதிகமான வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கலாம் என்றும், உரிம காலம் 5 ஆண்டு என்பது 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

விளம்பரத்திற்கான நேரம் 7 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும், 10 விநாடிகளுக்கான விளம்பரக் கட்டணம் 52 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்படிப்பட்ட மாற்றங்கள் காரணமாக சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சமூக வானொலி நிலையங்களின் பயன்பாடுகளை மேம்படுத்த ஆலோசனைகள் தமது அமைச்சகத்தால் வரவேற்கப்படுகின்றன என்று கூறினார்.

இந்த விழாவில் குரல் பதிவு வழியாக உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்,

எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 2500 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும், இது தகவல் தொடர்பு முறையை வலுப்படுத்தவும் உதவும் என்றார். மலை, கடல், காடு என நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடைசி கிராமங்கள் அல்ல, அவை முதல் கிராமங்கள் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கு ஏற்ப இத்தகைய கிராமங்களில் சமூக வானொலி நிலையங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

மண்டல அளவில் தொழில்நுட்ப மற்றும் நிகழ்ச்சி மேம்பாட்டுடன் தூர்தர்ஷனில் புதிதாக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் அதன் வீச்சு அதிகரித்துள்ளது என்று  கூறினார். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சமூக வானொலி நிலையங்கள் தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் நிமிஷ் ரஸ்தோகி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜே.பிரகாஷ், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி கௌரி சங்கர் கேசர் வாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Anurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?: புதிய அரசு அமைவதில் சிக்கல்!

Next Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உடனான நட்புறவில் தொடரும் வளர்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies