பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?: புதிய அரசு அமைவதில் சிக்கல்!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?: புதிய அரசு அமைவதில் சிக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை  கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால், இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார்.

பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம்,  வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது.  பல்வேறு வன்முறைகளுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் மத்தியில் பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்தது.

கடந்த சில நாட்களுக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மொத்தமுள்ள 265 தொகுதியில், 264 தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது.

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியின் நிர்வாகிகள், சுயேட்சையாக போட்டியிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54  இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் என்கிற கட்சி 17 இடங்களையும் கைப்பற்றியது. மேலும், மற்ற சிறிய கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார். இதனால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Tags: imranpakistan election resultnawazbhuto
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிப்பு? – வானிலை மையம் சொல்வது என்ன?

Next Post

2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது! – அனுராக் சிங்

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies