“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!
Sep 14, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. எம்.பி. ஆ.இராசாவின் அநாகரிகமான பேச்சை தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இது தெரியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சென்ற வருடம் முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் பேசும்போது, நமது கட்சியின் தலைவர்கள் என்ன பேசுவார்களோ எனக் காலையில் கண் விழிக்கும்போதே பதட்டமாக இருக்கிறது. இதனால் தனக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை எனப் புலம்பியதை நாடே அறியும். இதன் காரணமாகத் தி.மு.க-வினர் அநாகரிகமாகத் தேச தலைவர்கள் குறித்துப் பேசுவது அவரது காதுக்குச் செல்லாமல் மறைக்கப்படுகிறதோ என்று மக்கள் பேசுகின்றனர்.

சமீபகாலமாக தி.மு.க. பிரமுகர்கள் பேச்சு எல்லை மீறுகிறது. ஆதிக்கப் போக்குடன் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் எகத்தாளமாக வாய்க்கு வந்த படி பேசுகின்றனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சுதேசி இயக்கத்தின் முன்னோடி. ஏழை தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடிய போது ஆங்கிலயே கிறித்துவ அடக்குமுறை ஆட்சியில் பாதிக்கப்பட்டபோது தனது சொத்துக்களை விற்று பசியாற்றிய வள்ளல் அவர்.

சுதந்திர போரில் ஈடுபட்டு, சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தி, அனைத்தையும் நாட்டுக்காக அர்பணித்து இறுதியில் ஏழ்மையில் வாடினார் என்றாலும், தனது இறுதிக்காலம் வரையில் இதற்காக அவர் எந்த வருத்தமும் படவில்லை, யாரிடமும் கையேந்தவில்லை.

இந்த நிலையில், வ.உ.சியின் நேர்மைக்கும், எளிமைக்கும், தியாகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் “ஈவேராவிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி. கெஞ்சினார்” என்று கட்டுக்கதை கட்டி ஆ.இராசா பேசியது தேச பக்தர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பிராமணச் சமூகத்தை, பட்டியலின சமூகத்தைக் கேவலப்படுத்தி வந்த தி.மு.க-வினர் சமீபகாலமாக அனைத்து இந்து சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.

எனவே, ஆ.இராசா மீது முதல்வர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற இழிவான கருத்துக்களைத் தி.மு.க-வினர் பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: hindu mannanidmk fails
ShareTweetSendShare
Previous Post

குதிரை ஏற்றம் பயிற்சியில் நடிகை த்ரிஷா!

Next Post

கே.பாக்யராஜ் குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies