“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!
Jul 27, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. எம்.பி. ஆ.இராசாவின் அநாகரிகமான பேச்சை தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இது தெரியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சென்ற வருடம் முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் பேசும்போது, நமது கட்சியின் தலைவர்கள் என்ன பேசுவார்களோ எனக் காலையில் கண் விழிக்கும்போதே பதட்டமாக இருக்கிறது. இதனால் தனக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை எனப் புலம்பியதை நாடே அறியும். இதன் காரணமாகத் தி.மு.க-வினர் அநாகரிகமாகத் தேச தலைவர்கள் குறித்துப் பேசுவது அவரது காதுக்குச் செல்லாமல் மறைக்கப்படுகிறதோ என்று மக்கள் பேசுகின்றனர்.

சமீபகாலமாக தி.மு.க. பிரமுகர்கள் பேச்சு எல்லை மீறுகிறது. ஆதிக்கப் போக்குடன் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் எகத்தாளமாக வாய்க்கு வந்த படி பேசுகின்றனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சுதேசி இயக்கத்தின் முன்னோடி. ஏழை தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடிய போது ஆங்கிலயே கிறித்துவ அடக்குமுறை ஆட்சியில் பாதிக்கப்பட்டபோது தனது சொத்துக்களை விற்று பசியாற்றிய வள்ளல் அவர்.

சுதந்திர போரில் ஈடுபட்டு, சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தி, அனைத்தையும் நாட்டுக்காக அர்பணித்து இறுதியில் ஏழ்மையில் வாடினார் என்றாலும், தனது இறுதிக்காலம் வரையில் இதற்காக அவர் எந்த வருத்தமும் படவில்லை, யாரிடமும் கையேந்தவில்லை.

இந்த நிலையில், வ.உ.சியின் நேர்மைக்கும், எளிமைக்கும், தியாகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் “ஈவேராவிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி. கெஞ்சினார்” என்று கட்டுக்கதை கட்டி ஆ.இராசா பேசியது தேச பக்தர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பிராமணச் சமூகத்தை, பட்டியலின சமூகத்தைக் கேவலப்படுத்தி வந்த தி.மு.க-வினர் சமீபகாலமாக அனைத்து இந்து சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.

எனவே, ஆ.இராசா மீது முதல்வர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற இழிவான கருத்துக்களைத் தி.மு.க-வினர் பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: hindu mannanidmk fails
ShareTweetSendShare
Previous Post

குதிரை ஏற்றம் பயிற்சியில் நடிகை த்ரிஷா!

Next Post

கே.பாக்யராஜ் குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies