“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!
Sep 13, 2026, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பெரியாரிடம் கெஞ்சிய வ.உ.சி” – அவதூறு பரப்பும் ஆ.ராசா – இந்து முன்னணி கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தி.மு.க. எம்.பி. ஆ.இராசாவின் அநாகரிகமான பேச்சை தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இது தெரியுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சென்ற வருடம் முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் பேசும்போது, நமது கட்சியின் தலைவர்கள் என்ன பேசுவார்களோ எனக் காலையில் கண் விழிக்கும்போதே பதட்டமாக இருக்கிறது. இதனால் தனக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை எனப் புலம்பியதை நாடே அறியும். இதன் காரணமாகத் தி.மு.க-வினர் அநாகரிகமாகத் தேச தலைவர்கள் குறித்துப் பேசுவது அவரது காதுக்குச் செல்லாமல் மறைக்கப்படுகிறதோ என்று மக்கள் பேசுகின்றனர்.

சமீபகாலமாக தி.மு.க. பிரமுகர்கள் பேச்சு எல்லை மீறுகிறது. ஆதிக்கப் போக்குடன் இந்து சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் எகத்தாளமாக வாய்க்கு வந்த படி பேசுகின்றனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சுதேசி இயக்கத்தின் முன்னோடி. ஏழை தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடிய போது ஆங்கிலயே கிறித்துவ அடக்குமுறை ஆட்சியில் பாதிக்கப்பட்டபோது தனது சொத்துக்களை விற்று பசியாற்றிய வள்ளல் அவர்.

சுதந்திர போரில் ஈடுபட்டு, சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தி, அனைத்தையும் நாட்டுக்காக அர்பணித்து இறுதியில் ஏழ்மையில் வாடினார் என்றாலும், தனது இறுதிக்காலம் வரையில் இதற்காக அவர் எந்த வருத்தமும் படவில்லை, யாரிடமும் கையேந்தவில்லை.

இந்த நிலையில், வ.உ.சியின் நேர்மைக்கும், எளிமைக்கும், தியாகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் “ஈவேராவிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி. கெஞ்சினார்” என்று கட்டுக்கதை கட்டி ஆ.இராசா பேசியது தேச பக்தர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பிராமணச் சமூகத்தை, பட்டியலின சமூகத்தைக் கேவலப்படுத்தி வந்த தி.மு.க-வினர் சமீபகாலமாக அனைத்து இந்து சமூகத்தின் அனைத்து பிரிவினரையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.

எனவே, ஆ.இராசா மீது முதல்வர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற இழிவான கருத்துக்களைத் தி.மு.க-வினர் பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: hindu mannanidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

குதிரை ஏற்றம் பயிற்சியில் நடிகை த்ரிஷா!

Next Post

கே.பாக்யராஜ் குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்!

Related News

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies