மறக்கவும் மாட்டோம் - மன்னிக்கவும் மாட்டோம்!
Mar 15, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில், தொடர்புடைய அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் கடந்த 24 வருடத்திற்கு மேலாக உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய கைதிகள் அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ அரசு பிறப்பித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த இஸ்லாமிய கைதிகளை, வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசு விடுதலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க-வின் இந்த செயலுக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடவேண்டாம். கோவை குண்டு வெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை விடுதலை செய்வது ஆபத்து.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தீவிரவாதம் அங்கே இருந்து போகவில்லை, இன்னும் இருக்கிறது.

அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்கிறேன் என எழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

மேலும், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோ, இந்த விவகாரத்தை, நாங்கள் “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என சபதம் எடுத்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலை விவகாரம் வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: Bomb blastkovaikovai bomb blast
ShareTweetSendShare
Previous Post

திராவிடக் கட்சிகளால் இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் சென்னையை மீட்க முடியாது! – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies