மறக்கவும் மாட்டோம் - மன்னிக்கவும் மாட்டோம்!
Jul 24, 2025, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில், தொடர்புடைய அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் கடந்த 24 வருடத்திற்கு மேலாக உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய கைதிகள் அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ அரசு பிறப்பித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த இஸ்லாமிய கைதிகளை, வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசு விடுதலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க-வின் இந்த செயலுக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடவேண்டாம். கோவை குண்டு வெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை விடுதலை செய்வது ஆபத்து.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தீவிரவாதம் அங்கே இருந்து போகவில்லை, இன்னும் இருக்கிறது.

அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்கிறேன் என எழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

மேலும், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோ, இந்த விவகாரத்தை, நாங்கள் “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என சபதம் எடுத்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலை விவகாரம் வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: Bomb blastkovaikovai bomb blast
ShareTweetSendShare
Previous Post

திராவிடக் கட்சிகளால் இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் சென்னையை மீட்க முடியாது! – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் வெற்றி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies