நமது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த புல்வாமாவின் வீர தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,
கடந்த 20219 ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ராணுவப்படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம், அவந்தி போரா பகுதியில் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததன் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,
I bow to the valorous martyrs of Pulwama, who laid down their lives for our motherland. Their supreme sacrifice will always be remembered. Nation will forever remain indebted to our bravehearts.
— Amit Shah (@AmitShah) February 14, 2024
நமது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த புல்வாமாவின் வீர தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்களின் உன்னத தியாகம் என்றும் நினைவுகூரப்படும். தேசம் என்றென்றும் நமது துணிச்சலான நெஞ்சங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.