140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! - பிரதமர் மோடி
Nov 9, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Feb 15, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அரபு வென்றுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இது மனிதக்குல பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னமாக விளங்கும் என்றும் மனித வரலாற்றின் தங்கத்திலான புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பு கட்டிய கோவிலின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி,

அபுதாபியில் பிரமாண்டமான கோவிலை நிஜமாக்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், இது வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர்களின் இதயங்களையும், 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் வென்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த பாப்ஸ் கோயில் உலகம் முழுவதும் மத நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த பன்முகத்தன்மையில் வெறுப்பு நமது கண்களுக்குத் தெரிவதில்லை. பன்முகத்தன்மையை எங்கள் சிறப்பு என்று கருதுகிறோம்! இந்த கோவிலில், ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.

இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் ஹைடெக் கட்டிடங்களுக்குப் பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், அதில் இந்த கோயிலையும் மற்றொரு கலாச்சார அத்தியாயமாகச் சேர்த்துள்ளது.

வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான மக்களிடையேயான தொடர்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த பிரமாண்ட கோவிலை நிஜமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றால் அது வேறு யாருமல்ல.. என் சகோதரன் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தான்.. கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசை முழு மனதுடன் உழைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வென்றுள்ளது.

இன்று அபுதாபியில் கிடைத்த மகிழ்ச்சி அலையால் அயோத்தியில் எங்கள் இன்பம் அதிகரித்து உள்ளது. முதலில் அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயிலுக்கும், பிறகு அபுதாபியில் உள்ள இந்தக் கோயிலுக்கும் நான் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம்.

கடந்த மாதம் தான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பலகால கனவு நிறைவேறியது. தொடர்ந்து இப்போது இங்கே அமீரகத்திலும் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது” என்று  தெரிவித்தார்.

Tags: PM Modiuae
ShareTweetSendShare
Previous Post

ஓடஓட துரத்திய காட்டு யானை – மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர் – நடந்தது என்ன?

Next Post

தோஹா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : கத்தார் பிரதமருடன் ஆலோசனை!

Related News

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

Load More

அண்மைச் செய்திகள்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies