140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! - பிரதமர் மோடி
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அரபு வென்றுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இது மனிதக்குல பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னமாக விளங்கும் என்றும் மனித வரலாற்றின் தங்கத்திலான புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பு கட்டிய கோவிலின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி,

அபுதாபியில் பிரமாண்டமான கோவிலை நிஜமாக்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், இது வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர்களின் இதயங்களையும், 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் வென்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த பாப்ஸ் கோயில் உலகம் முழுவதும் மத நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த பன்முகத்தன்மையில் வெறுப்பு நமது கண்களுக்குத் தெரிவதில்லை. பன்முகத்தன்மையை எங்கள் சிறப்பு என்று கருதுகிறோம்! இந்த கோவிலில், ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.

இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் ஹைடெக் கட்டிடங்களுக்குப் பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், அதில் இந்த கோயிலையும் மற்றொரு கலாச்சார அத்தியாயமாகச் சேர்த்துள்ளது.

வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான மக்களிடையேயான தொடர்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த பிரமாண்ட கோவிலை நிஜமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றால் அது வேறு யாருமல்ல.. என் சகோதரன் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தான்.. கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசை முழு மனதுடன் உழைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வென்றுள்ளது.

இன்று அபுதாபியில் கிடைத்த மகிழ்ச்சி அலையால் அயோத்தியில் எங்கள் இன்பம் அதிகரித்து உள்ளது. முதலில் அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயிலுக்கும், பிறகு அபுதாபியில் உள்ள இந்தக் கோயிலுக்கும் நான் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம்.

கடந்த மாதம் தான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பலகால கனவு நிறைவேறியது. தொடர்ந்து இப்போது இங்கே அமீரகத்திலும் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது” என்று  தெரிவித்தார்.

Tags: PM Modiuae
ShareTweetSendShare
Previous Post

ஓடஓட துரத்திய காட்டு யானை – மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர் – நடந்தது என்ன?

Next Post

தோஹா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : கத்தார் பிரதமருடன் ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies