திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகார்! - அண்ணாமலை கொடுத்த ஆதாரம்!
Oct 3, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகார்! – அண்ணாமலை கொடுத்த ஆதாரம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது, தமிழகக் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, இலவச வேட்டி சேலை வங்கும் திட்டத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினார். அத்தோடு நிற்காமல், அது தொடர்பான புகாரை ஆதாரங்களுடன், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அபய் குமார் சிங்கிடம் புகாராகவே கொடுத்துள்ளார்.

அதில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி புடவைகள் தயாரிக்கத் திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜவுளி ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான புகழ்பெற்ற மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் ஒன்றான தென்னிந்திய டெக்ஸ்டைல் ரிசர்ச் அசோசியேஷனில் சோதனைக்காக, இலவச வேட்டிகளில் ஒன்றை வழங்கினோம். அதில், வார்ப்பில் 22% மட்டுமே பருத்தியால் ஆனது என்றும், 68% வார் பாலியஸ்டரால் ஆனது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 -ம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்யப் பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார் பகுதியை நெய்யக் கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு, வார் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூ.160-க்கு கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார் பகுதியை நெய்துள்ளார்கள்.

அத்துடன், கைத்தறி வேட்டியின் வார்ப்புக்கு 60 sK கோன் நூலையும், பவர்லூம் வேட்டிக்கு 40 sK கோனையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, வார்ப்புக்கு பருத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பாலியஸ்டரை பயன்படுத்தக் கூடாது.

அந்த வகையில், ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி உள்ளனர். பருத்தி வெறும் 22 சதவீதம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்.

எனவே, அமைச்சர் காந்தி மீது, ஊழல் தடுப்பு சடத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்திற்குச் சென்று நீதி பெறவும் தயாராகி வருகிறார். இதனால், திமுக தலைமையும், அமைச்சர் காந்தியும் பதற்றத்தில் உள்ளனர்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் பத்திரங்களால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை! – அண்ணாமலை

Next Post

“காங்கிரஸ் ஊழல் நிறைந்தது, அதன் ஆட்சியில் இந்தியா முன்னேறத் தவறிவிட்டது” : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies