திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகார்! - அண்ணாமலை கொடுத்த ஆதாரம்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர் காந்தி மீது ஊழல் புகார்! – அண்ணாமலை கொடுத்த ஆதாரம்!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது, தமிழகக் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, இலவச வேட்டி சேலை வங்கும் திட்டத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினார். அத்தோடு நிற்காமல், அது தொடர்பான புகாரை ஆதாரங்களுடன், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அபய் குமார் சிங்கிடம் புகாராகவே கொடுத்துள்ளார்.

அதில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 1.68 கோடி வேட்டி, 1.68 கோடி புடவைகள் தயாரிக்கத் திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜவுளி ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான புகழ்பெற்ற மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் ஒன்றான தென்னிந்திய டெக்ஸ்டைல் ரிசர்ச் அசோசியேஷனில் சோதனைக்காக, இலவச வேட்டிகளில் ஒன்றை வழங்கினோம். அதில், வார்ப்பில் 22% மட்டுமே பருத்தியால் ஆனது என்றும், 68% வார் பாலியஸ்டரால் ஆனது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 -ம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்யப் பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார் பகுதியை நெய்யக் கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு, வார் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கிலோ ரூபாய் 320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூ.160-க்கு கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார் பகுதியை நெய்துள்ளார்கள்.

அத்துடன், கைத்தறி வேட்டியின் வார்ப்புக்கு 60 sK கோன் நூலையும், பவர்லூம் வேட்டிக்கு 40 sK கோனையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, வார்ப்புக்கு பருத்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பாலியஸ்டரை பயன்படுத்தக் கூடாது.

அந்த வகையில், ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி உள்ளனர். பருத்தி வெறும் 22 சதவீதம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்.

எனவே, அமைச்சர் காந்தி மீது, ஊழல் தடுப்பு சடத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்திற்குச் சென்று நீதி பெறவும் தயாராகி வருகிறார். இதனால், திமுக தலைமையும், அமைச்சர் காந்தியும் பதற்றத்தில் உள்ளனர்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பத்திரங்களால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை! – அண்ணாமலை

Next Post

“காங்கிரஸ் ஊழல் நிறைந்தது, அதன் ஆட்சியில் இந்தியா முன்னேறத் தவறிவிட்டது” : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies