சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் (Indian Naval Warship INS Chennai), நேற்று (பிப்ரவரி 16) பத்திரமாக சென்னை வந்தடைந்தது.

அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன்கள் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்வி லிலா நார்ஃப்லோக் (MV Lila Norfolk) என்ற சரக்கு கப்பல், ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த விமானம் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் 5 முதல் 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறியதாக கடல் வர்த்தக அமைப்பு தெரிவித்ததை அடுத்து, கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்திய கடற்படை, ஐஎன்எஸ் சென்னை கப்பலை எம்வி லிலா நார்ஃப்லோக் கப்பலை நோக்கி அனுப்பி வைத்தது.

அதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்தபடி, கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்து சென்ற ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறுமாறு ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதன் பின்னர், போர்க்கப்பலில் இருந்த கடற்படை கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலுக்குள் குதித்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கப்பலில் எங்கு தேடியும் கடற்கொள்ளையர்கள் சிக்கவில்லை. எனவே, இந்திய கடற்படை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை விட்டு தப்பித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே, கப்பலுக்குள் மாட்டித் தவித்த மாலுமிகளை, கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு, மீண்டும் சரக்கு கப்பல் தனது பயணத்தைத் தொடங்க வேண்டிய உதவிகளை ஐஎன்எஸ் போர்க்கப்பல் அளித்து வந்தது. இந்நிலையில், 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளை மீட்கும் பணியில் களமிறங்கிய ஐஎன்எஸ் போர்க்கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில், நேற்று சென்னை துறைமுகம் வந்துள்ளது.

Tags: INS
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து போட்டி – கலக்கிய வீரர்கள்!

Next Post

இங்கிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு : இந்தியா 126 ரன்கள் முன்னிலை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies