சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!
May 11, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் (Indian Naval Warship INS Chennai), நேற்று (பிப்ரவரி 16) பத்திரமாக சென்னை வந்தடைந்தது.

அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன்கள் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்வி லிலா நார்ஃப்லோக் (MV Lila Norfolk) என்ற சரக்கு கப்பல், ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த விமானம் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் 5 முதல் 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறியதாக கடல் வர்த்தக அமைப்பு தெரிவித்ததை அடுத்து, கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்திய கடற்படை, ஐஎன்எஸ் சென்னை கப்பலை எம்வி லிலா நார்ஃப்லோக் கப்பலை நோக்கி அனுப்பி வைத்தது.

அதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்தபடி, கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்து சென்ற ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறுமாறு ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதன் பின்னர், போர்க்கப்பலில் இருந்த கடற்படை கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலுக்குள் குதித்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கப்பலில் எங்கு தேடியும் கடற்கொள்ளையர்கள் சிக்கவில்லை. எனவே, இந்திய கடற்படை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை விட்டு தப்பித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே, கப்பலுக்குள் மாட்டித் தவித்த மாலுமிகளை, கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு, மீண்டும் சரக்கு கப்பல் தனது பயணத்தைத் தொடங்க வேண்டிய உதவிகளை ஐஎன்எஸ் போர்க்கப்பல் அளித்து வந்தது. இந்நிலையில், 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளை மீட்கும் பணியில் களமிறங்கிய ஐஎன்எஸ் போர்க்கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில், நேற்று சென்னை துறைமுகம் வந்துள்ளது.

Tags: INS
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து போட்டி – கலக்கிய வீரர்கள்!

Next Post

இங்கிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு : இந்தியா 126 ரன்கள் முன்னிலை!

Related News

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies