அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொத்து மதிப்பு பற்றி பொய் தகவல்கள் அளித்ததற்காக ரூ.2.94 ஆயிரம் கோடிஅபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் டிரம்ப் நிறுவனம் ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அந்நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட டிரம்பிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.