ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!
Mar 15, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.

இதில் இந்திய மகளிர் அணி காலிறுதிச்சுற்றில் ஹாங்காங்குடன் விளையாடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த காலிறுதியில் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் அஷ்மிதாவும், இரட்டையர் பிரிவில் அஷ்வினி – தனிஷா ஜோடியும் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இதன் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜப்பானை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி இறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பி.வி.சிந்து, ஜப்பானின் அயா ஓஹோரியாவுடன் விளையாடினார்.

இதில் பி.வி.சிந்து 21-17, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். அப்போது இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

அப்போது இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் ட்ரீசா – காயத்ரி, ஜப்பான் ஜோடியான மாட்சுயாமா-ஷிடா உடன் விளையாடியது.

இதில் 21-17, 16-21, 22-20 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

அப்போது முன்னாள் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாராவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணியின் அஷ்மிதா சலிஹா 21-17, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை 2-1 என முன்னிலைப் படுத்தினார்.

பின்னர் நடைபெற்ற மற்றொரு இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சிந்து – போனப்பா ஜோடி ஜப்பான் அணியின் மியாவுரா-சகுரமோட்டோ ஜோடியை எதிர்க்கொண்டது.

இதில் ஜப்பான் அணி 21-14, 21-11 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் அன்மோல் கர்ப் ஜப்பானின் நிடாரா நட்சுகியை 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவை 3-2 என்ற கணக்கில் முன்னிலை படுத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

Tags: Asian Badminton Championship: Indian women's team qualified for the final!
ShareTweetSendShare
Previous Post

தடம் புரண்ட இரயில் என்ஜின் – சென்னையில் பரபரப்பு!

Next Post

முடிந்து போன இண்டி கூட்டணி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து!!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies