வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு, இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை விவசாயிகளை ஆதரிப்பதற்கும், இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்குமான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பின் தூணாக (FCI) குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், உத்திப்பூர்வ உணவு தானிய சேமிப்புகளை பராமரித்தல், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகித்தல் மற்றும் சந்தையில் உணவு தானிய விலைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் உத்தரவுகளை திறம்பட நிறைவேற்றுவதில் அதன் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் அதிகரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

நிதித் தேவையின் இடைவெளியை ஈடுகட்ட இந்திய உணவுக் கழகம் ரொக்கக் கடன், குறுகிய காலக் கடன் வழிவகைகள் போன்றவற்றை நாடுகிறது.

அனுமதிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரித்தல் மற்றும் மேலும் உட்செலுத்துதல் மூலம் வட்டிச் சுமை குறைந்து, பொருளாதாரச் செலவு குறையும். இந்த மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலம், இந்திய உணவுக் கழகம் தனது சேமிப்பு வசதிகளை நவீனப்படுத்துதல், போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கைகள் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு உணவு தானியங்களை திறம்பட விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் அவசியம்.

நடைமுறை மூலதனத் தேவைக்காகவும், மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்காகவும் இந்திய உணவுக் கழகத்திற்கு சமபங்கு உரிமைகளை மத்திய அரசு வழங்குகிறது. தற்போதுள்ள உள் அமைப்புகள் மற்றும் வெளிப்புற அமைப்புகள் (மாநில கொள்முதல் இணையதளங்கள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க இந்திய உணவுக் கழகம் ஒரு விரிவான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மின்னணு அலுவலக அமலாக்கம் ஏற்கெனவே இந்திய உணவுக் கழகத்தை குறைந்த காகித செலவு கொண்ட அமைப்பாக மாற்றியுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் முக்கிய செயல்பாட்டு மென்பொருளாக விளங்கும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளின் இந்த முன்முயற்சிகள், பொதுவான டிஜிட்டல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுடன், தகவல்களுக்கான ஒற்றை ஆதாரத்தை வழங்கும்.

இந்திய உணவுக் கழகம் தனது திறனை மேம்படுத்தும் வகையில், சிமெண்ட் சாலைகள், கூரை பராமரிப்பு, மின் விளக்குகள் மற்றும் எடைமேடைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை விடாமுயற்சியுடன் செயல்படுத்தி உணவு பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.

Tags: central governmentagriculture
ShareTweetSendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024! – இஸ்ரோ அறிவிப்பு

Next Post

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி : திடீரென மாற்றப்பட்ட கே.எஸ்.அழகிரி!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies