குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார்
ஜனாதிபதி திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார். தியாகிகள் தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அவர், செல்லுலார் சிறை வளாகம் மற்றும் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.
செல்லுலார் சிறைச்சாலையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியையும் திரௌபதி முர்மு பார்வையிடுகிறார். போர்ட் பிளேயரில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்துக்கும் அவர் செல்கிறார். மேலும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்
இந்திரா பாயின்ட் கேம்பல் விரிகுடா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் தீவுக்குச் நாளை செல்லும் திரௌபதி முர்மு, ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை காண்கிறார். 21ஆம் தேதி போர்ட் பிளேயரில் உள்ள ராஜ் நிவாஸில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் PVTG உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடுகிறார். அன்றைய தினம், ராதாநகர் கடற்கரையில் துருப்புக்களின் சாகச நிகழ்ச்சியை ஜனாதிபதி பார்வையிடுகிறார்.