WPL : கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி ? ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மந்தனா!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : கோப்பையை வெல்லுமா ஆர்.சி.பி ? ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மந்தனா!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் போன்று பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 5 அணிகள் விளையாடின.

முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மார்ச் மாதம் நடைபெற்ற இதன் முதலாவது சீசன் போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலம் மும்பையில் மட்டுமே நடத்தப்பட்டன.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

முதலாவது கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த ஆண்டுக்கான பெண்கள் பெண்கள் பிரீமியர் லீக் தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த சீசன் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியிலிருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் நாங்கள் புதிய வீரர்களை வாங்கியுள்ளோம். எனவே கடந்த சீசனை விட இந்த முறை அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் நாங்கள் அணியில் இணைந்தோம். அதனால் மற்ற வீராங்கனைகளை பற்றி 90 சதவீதம் எங்களுக்கு தெரியாது. இந்த ஆண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முக்கியம். அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “என்னுடைய தனிப்பட்ட இலக்கை பொறுத்த வரை கடந்த சீசனில் நான் எதிர்பார்த்த செயல்திறனை என்னால் வழங்க முடியவில்லை. இந்த முறை, கடந்த ஆண்டு தவறுகளை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை. எங்களது பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக இந்த முறை வீராங்கனைகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.

Tags: WPLWPL: Will RCB win the trophy? Mandana gave hope to the fans!
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies