தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 84 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
தெலுங்கானாவில் ஜோதி என்பவர் பழங்குடியினர் நலப் பொறியியல் துறையில் செயல் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், அரசு சலுகைகளை பெற வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து, புகார் அளித்தவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை பெண் அதிகாரியிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர், ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பெண் அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.