தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக மறைக்கிறது! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Jul 26, 2025, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக மறைக்கிறது! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Feb 22, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு மேல் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன்,

மாநில நிதியில் மத்திய அரசு தலையிடுவதாக, நிதியை பறிப்பது போன்று நிதி அமைச்சர் பேசுவது ஏற்புடையது இல்லை.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் வீடு கட்டம் திட்டத்தின் கீழ் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளார்கள் அதில் மாநில அரசு பங்கு என்ன மத்திய அரசு பங்கு என்ன என்பது சரியாக குறிப்பிடவில்லை.

அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும், கரோனா காலத்தில் இலவச ரேஷன் உள்ளிட்டவை கொண்டு வந்ததாகவும், இவற்றை பேச திமுகவினர் மறுக்கிறார்கள் என புகார் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரியில் ஒரு சதவீதம் கூட வரவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். இதனால் மாநில அரசு பல்வேறு பாதிப்படைவதாக அவர் குறிப்பிடுகிறார், ஆனால் இது சார்பாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் விரிவாக பேசியுள்ளார்.

2023-24 ஆம் நிதி ஆண்டில் 2.3 லட்சத்திற்கு மேல் நிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு மேல் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டின் மூலதன செலவுகளுக்கு 6500 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் தமிழ்நாட்டின் பல லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

ஜல்ஜீவன் திட்டத்தினால் குடிநீர் இணைப்பு பெற்றவர்களை குறித்து எந்தவித குறிப்பும் இடம்பெறவில்லை, அதே போன்று மத்திய அரசு வழங்கக்கூடிய கடன்களை பெற்றவர்கள் குறித்தும், நிதிகள் குறித்தும் மாநில அரசு சரியான முறையில் குறிப்புகள் வைத்துக் கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டங்கள், நிதிகள், அதனால் பயன் பெறுவோர் குறித்து மாநில அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்.

நொய்யல் ஆறு திட்டம் குறித்து பேசியிருந்தேன், மத்திய அரசு 990 கோடி ரூபாய் நடந்தால் வழி காவேரி என்ற திட்டத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும் இதனைப் பற்றி பேரவையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கோவையில் நூலகம் 2026 ஆம் ஆண்டு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், அமைத்தால் நல்லது. தேங்காய் எண்ணெய்யை ஞாயவிலை கடைகளில் விற்க வேண்டும் என தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை பேரவையில் வைத்தேன், பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது, இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags: vanathi srinivasan bjp
ShareTweetSendShare
Previous Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி : 314 மரங்களை வெட்ட பொது ஏலம்!

Next Post

2024 ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டி எங்கு?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies