நாசா அனுப்பிய ஓடிசிஸ் லேண்டர் விண்கலம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.
ஒடிஸியஸ் லேண்டர் அடைந்த 21 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்து சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.
இந்நிலையில் தற்போது ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கியுள்ளது.
ஹெக்சகன் வடிவிலான இந்த விண்கலம் ஒரு மணி நேரத்திற்கு 6,500 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாகச் சென்று, நிலவின் தென் துருவத்தில் இருந்து 186 மைல் தொலைவில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளது.
அதேபோல், லேண்டரில் இருந்து உடனடி தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. லேண்டரில் உள்ள EAGLE CAM-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்டரில் இருந்து தரவுகளை பெற சில மணி நேரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.