தஞ்சை மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் எனக் கூறப்படுகிறு. மாசி மாதத்தினை `கும்ப மாதம்’ என்றும் ஆன்மீக அன்பர்கள் அழைப்பது உண்டு. புனிதமான இந்த மாதத்தில், கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் இறைவனை எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சேவை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிரசித்தி பெற்ற மாசி மகா விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
மேலும், கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.