இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்
Jul 25, 2025, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்

Web Desk by Web Desk
Feb 24, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில்  இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, “ஹரித்வார் ஒரு முக்கிய ஆன்மீக தலமாகும். இமாச்சல பிரதேசத்திலிருந்து ஏராளமான மக்கள் புனித யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வருகை தருகிறார்கள். இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயணிகள் நேரடியாக ரயிலில் ஹரித்வாருக்குச் செல்வதற்கு வசதியாக இருக்குமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

உனாவிலிருந்து சஹரன்பூர் வரை இயங்கி வந்த உனா ஹிமாச்சல்-சஹரன்பூர் புறநகர் மின்சார ரயிலின் விரிவாக்கத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ரயில் இப்போது உனாவிலிருந்து ஹரித்வார் வரை இயக்கப்படும். இது பயணிகளுக்கு நல்ல வசதியை வழங்குகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பகுதிக்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். பாஜகவால்தான் இந்தியாவின் அதிநவீன ரயில் இப்போது இமாச்சல பிரதேசத்தில் இயக்கப்படுகிறது. ரயில்வே சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய ரயில்களை இயக்குவது முதல் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்குவது வரை இமாச்சல பிரதேசத்தில் எந்தவொரு இணைப்பு சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கும் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.

2023-24 நிதியாண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பானுபாலி-பிலாஸ்பூர்-பெரி ரயில் பாதைக்காக 1,000 கோடி ரூபாயும், சண்டிகர்-பாடி ரயில் பாதைக்கு 450 கோடி ரூபாயும், நங்கல்-தல்வாரா ரயில் பாதைக்கு 452 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதை விட 17 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.

Tags: HaridwarPM ModiAnurag ThakurHimachalmodi government
ShareTweetSendShare
Previous Post

கோயில் வரி தொடர்பான சட்ட மசோதா : கர்நாடகா மேலவையில் தோல்வி!

Next Post

ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies