இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்
Oct 25, 2025, 08:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி ரயில் சேவை மோடி அரசின் பரிசு -அனுராக் தாக்கூர்

Web Desk by Web Desk
Feb 24, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில்  இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, “ஹரித்வார் ஒரு முக்கிய ஆன்மீக தலமாகும். இமாச்சல பிரதேசத்திலிருந்து ஏராளமான மக்கள் புனித யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வருகை தருகிறார்கள். இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயணிகள் நேரடியாக ரயிலில் ஹரித்வாருக்குச் செல்வதற்கு வசதியாக இருக்குமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.

உனாவிலிருந்து சஹரன்பூர் வரை இயங்கி வந்த உனா ஹிமாச்சல்-சஹரன்பூர் புறநகர் மின்சார ரயிலின் விரிவாக்கத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ரயில் இப்போது உனாவிலிருந்து ஹரித்வார் வரை இயக்கப்படும். இது பயணிகளுக்கு நல்ல வசதியை வழங்குகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பகுதிக்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். பாஜகவால்தான் இந்தியாவின் அதிநவீன ரயில் இப்போது இமாச்சல பிரதேசத்தில் இயக்கப்படுகிறது. ரயில்வே சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய ரயில்களை இயக்குவது முதல் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்குவது வரை இமாச்சல பிரதேசத்தில் எந்தவொரு இணைப்பு சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கும் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.

2023-24 நிதியாண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பானுபாலி-பிலாஸ்பூர்-பெரி ரயில் பாதைக்காக 1,000 கோடி ரூபாயும், சண்டிகர்-பாடி ரயில் பாதைக்கு 450 கோடி ரூபாயும், நங்கல்-தல்வாரா ரயில் பாதைக்கு 452 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே விரிவாக்கத்திற்காக 1,838 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதை விட 17 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.

Tags: PM ModiAnurag ThakurHimachalmodi governmentHaridwar
ShareTweetSendShare
Previous Post

கோயில் வரி தொடர்பான சட்ட மசோதா : கர்நாடகா மேலவையில் தோல்வி!

Next Post

ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies