WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !
Feb 6, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இரண்டாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.  டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களும், மேகனா 53 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. உ.பி. அணியில் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, எக்லெஸ்டோன், தஹ்லியா, கிரேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் உ.பி. அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.  உபி வாரியர்ஸ் அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா இணைந்து 50 ரன்களுக்கும் மேல்  சேர்த்தனர்.

அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. பெங்களூர் அணியின் சோபனா ஆஷா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோலினேக்ஸ் பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர் உபி அணியின் எக்செல்ஸ்டன் மற்றும் தீப்தி சர்மா.

ஐந்தாவது பந்தில் தீப்தி சர்மா ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முந்தைய மும்பை இந்தியன்ஸ் போட்டி போல, கடைசி பந்தில் தீப்தி சிக்ஸ் அடித்து வெற்றி தேடிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தீப்தி. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி  வெற்றி பெற்றது.  ஆட்டநாயகி விருது 5 விக்கெட்களை வீழ்த்திய ஆர்.சி.பி அணியின் சோபானவுக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLRCBUPWRCB win
ShareTweetSendShare
Previous Post

புறநகர் ரயில்கள் ரத்து – 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

Next Post

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

Related News

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபாரதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies