WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !
May 9, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இரண்டாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.  டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களும், மேகனா 53 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. உ.பி. அணியில் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, எக்லெஸ்டோன், தஹ்லியா, கிரேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் உ.பி. அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.  உபி வாரியர்ஸ் அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா இணைந்து 50 ரன்களுக்கும் மேல்  சேர்த்தனர்.

அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. பெங்களூர் அணியின் சோபனா ஆஷா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோலினேக்ஸ் பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர் உபி அணியின் எக்செல்ஸ்டன் மற்றும் தீப்தி சர்மா.

ஐந்தாவது பந்தில் தீப்தி சர்மா ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முந்தைய மும்பை இந்தியன்ஸ் போட்டி போல, கடைசி பந்தில் தீப்தி சிக்ஸ் அடித்து வெற்றி தேடிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தீப்தி. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி  வெற்றி பெற்றது.  ஆட்டநாயகி விருது 5 விக்கெட்களை வீழ்த்திய ஆர்.சி.பி அணியின் சோபானவுக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLRCBUPWRCB win
ShareTweetSendShare
Previous Post

புறநகர் ரயில்கள் ரத்து – 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

Next Post

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies