WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !
Jun 23, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திரில் வெற்றி !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இரண்டாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.  டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 62 ரன்களும், மேகனா 53 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. உ.பி. அணியில் ராஜேஸ்வரி 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, எக்லெஸ்டோன், தஹ்லியா, கிரேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் உ.பி. அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.  உபி வாரியர்ஸ் அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா இணைந்து 50 ரன்களுக்கும் மேல்  சேர்த்தனர்.

அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. பெங்களூர் அணியின் சோபனா ஆஷா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோலினேக்ஸ் பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர் உபி அணியின் எக்செல்ஸ்டன் மற்றும் தீப்தி சர்மா.

ஐந்தாவது பந்தில் தீப்தி சர்மா ஒரு ஃபோர் அடித்தார். இதை அடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முந்தைய மும்பை இந்தியன்ஸ் போட்டி போல, கடைசி பந்தில் தீப்தி சிக்ஸ் அடித்து வெற்றி தேடிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தீப்தி. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி  வெற்றி பெற்றது.  ஆட்டநாயகி விருது 5 விக்கெட்களை வீழ்த்திய ஆர்.சி.பி அணியின் சோபானவுக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLRCBUPWRCB win
ShareTweetSendShare
Previous Post

புறநகர் ரயில்கள் ரத்து – 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

Next Post

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies