அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், 10 தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம்’ என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டை வறுமையற்ற, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும், சமூகநீதியை நிலைநாட்டும் மாநிலமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தமிழகத்தின் கடன் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும், டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞர்களுக்கும் அரசு டெண்டர்களில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, டெண்டர்கள் மூலம் சில தனிநபர்கள் மற்றும் கட்சியினருக்கு பெருமளவில் பணம் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும்,
திட்ட அனுமதி பெற நிலவி வந்த ஊழல் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மேலும், வருவாய் மேம்பாட்டுக் குழு மூலம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்குவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
















