குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்
Aug 5, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 07:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடந்ததாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள சேதுராஜ் மற்றும் கார்த்திக்கும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு சுயாதீன விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கில் தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குதிரை பேரம் வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: madras high courtinterim stayTVK governmentTVK MLAhorse-trading investigaion
ShareTweetSendShare
Previous Post

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies