முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத் பேசிய பகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு வணக்கம் கூறி உரையாற்றிய அவர், முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். பணநாயகத்தை தோற்கடித்த ஜனநாயகன், திரைப்படத்தில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் நாயகன் எனவும், கோட் சூட் அணிந்த விவசாயி எனவும் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேளாண் அறிக்கையில் உள்ளவற்றை மட்டும் படிக்க அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டை வாசித்து வந்த அமைச்சர் வினோத், உரையின் முடிவில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர், அமைச்சர் பேசியதில் இருந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும் என தெரிவித்தார்.
















