இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர், கடந்த 7 ஆண்டுகளில் மீண்டும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய ‘ஆபரேஷன் திரிசூலம்’, ‘பாரத்போல்’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளில் 36 நாடுகளில் இருந்து 274 பேர் நாடு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாதம், நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தின் கீழ் தப்பியோடிய குற்றவாளிகளின் 17 ஆயிரத்து 874 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு, 18 ஆயிரத்து 762 கோடி நிதி மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இன்டர்போல் மூலம் 401 குற்றவாளிகளுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















