தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2 ஆயிரத்து 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் சார்ந்த புதிய தொழிற்பயிற்சி 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த புதிய தொழிற்பயிற்சி பிரிவு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 50 தொழிற்பயிற்சி நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யப்படும் எனவும்,
2031-ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2 ஆயிரத்து 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
















