குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! - பிரதமர் மோடி பேச்சு
Oct 6, 2025, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடும்ப அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது! – பிரதமர் மோடி பேச்சு

Web Desk by Web Desk
Feb 27, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,

தனது அரசாங்கம் தேசம் முதல் என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு முன்னேறி வருவதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட தனது அரசு நிறைவேற்றிய சாதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்தியாவில் முழுமையடையாத பணிகள் அனைத்தையும் தேசம் முதல் என்ற சிந்தனையுடன் அரசாங்கம் முடித்தது என்றார்.

முந்தைய அரசுகள் கடைப்பிடித்த திட்டங்களை முடக்கி நிறுத்தும் அணுகுமுறையை தனது அரசு கைவிட்டதாக கூறினார். இந்தியா தனது ஒளிமயமான எதிர்காலத்திற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருவதாகவும், இந்தியாதான் எதிர்காலம் என்று அனைவரும் கூறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த எண்ணம் மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பாஜக கூட்டணி அரசின் பணி, கலாச்சாரம் மற்றும் நிர்வாகமே மிகப்பெரிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். அரசு அலுவலகங்கள் இப்போது பிரச்சனையாக இல்லாமல், நாட்டு மக்களுடன் நட்பாக மாறி வருகின்றன என்றார்.

இந்தியா ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதாக இன்று உலகம் நினைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பத்து ஆண்டுகாலாக சக்திவாய்ந்த ஏவுதளமாக பாஜக இந்தியாவில் இருப்பதால்தான் என்று பிரதமர் கூறினார்.

தனது நாட்டு மக்கள் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்கும் போதுதான் இந்தியா பெரிய பாய்ச்சலை எடுக்க முடியும் என்றார். கடந்த பத்து ஆண்டுகளில், மனநிலை மாற்றங்கள், தன்னம்பிக்கை, நல்லாட்சி உள்ளிட்ட பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறியது என நினைப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.  இந்தியா இன்று செய்வது மிகப்பெரியது மற்றும் சிறந்தது என்று அவர் வலியுறுத்தினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

Next Post

விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் பாரத பிரதமர் மோடி!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies