“நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
புது தில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாட்டு விக்சித் பாரத் @2047 நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
விக்சித் பாரத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தவர், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்தார்.
மத்திய அரசால் முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவை வரும் ஆண்டுகளில் தொடரும் என்றார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அரசு மூலதனச் செலவினங்களை அதிகரித்து வருகிறது என்றார்.
மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, லாஜிஸ்டிக் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் வலுவான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகியவை மகத்தான ஆற்றலைக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து நிலைகளில் இருந்து முதல் ஐந்து இடங்களை எட்டியுள்ளது என்றார்.
UPA அரசாங்கத்தின் ஆட்சி ஒரு தசாப்தத்தை இழந்துவிட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், அது இப்போது Techade மற்றும் UPA லிருந்து UPI க்கு வந்துள்ளது என்றார்.
அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை எடுத்துரைத்தவர், இந்த ஆண்டின் சாதனையான மூலதனச் செலவு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
45 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் கிடைப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான MSP கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது என்றும், இந்த வலுவான அடித்தளத்தின் மீது அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.