நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது! - நிர்மலா சீதாராமன்
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

புது தில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாட்டு விக்சித் பாரத் @2047 நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

விக்சித் பாரத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தவர், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்தார்.

மத்திய அரசால் முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவை வரும் ஆண்டுகளில் தொடரும் என்றார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அரசு மூலதனச் செலவினங்களை அதிகரித்து வருகிறது என்றார்.

மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, லாஜிஸ்டிக் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது மற்றும் வலுவான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகியவை மகத்தான ஆற்றலைக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து நிலைகளில் இருந்து முதல் ஐந்து இடங்களை எட்டியுள்ளது என்றார்.

UPA அரசாங்கத்தின் ஆட்சி ஒரு தசாப்தத்தை இழந்துவிட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், அது இப்போது Techade மற்றும் UPA லிருந்து UPI க்கு வந்துள்ளது என்றார்.

அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகளை எடுத்துரைத்தவர், இந்த ஆண்டின் சாதனையான மூலதனச் செலவு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

45 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் கிடைப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான MSP கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது என்றும், இந்த வலுவான அடித்தளத்தின் மீது அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: bjpBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

T20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த வீரர் : யார் இவர் ?

Next Post

இனி நண்பர்களிடம் யாரும் பொய் சொல்ல முடியாது : இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies