இந்திய மக்கள்தொகையின் 10,000 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர்!
Feb 7, 2026, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மக்கள்தொகையின் 10,000 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர்!

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரபணு ஆய்வு உலகெங்கிலும் எதிர்காலத்துக்கான சுகாதார உத்திகளை, சிகிச்சைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 10,000 இந்தியர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தி மரபணு அடிப்படையிலான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் ஒரு விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “மரபணு ஆய்வு உலகெங்கிலும் எதிர்காலத்துக்கான சுகாதார உத்திகளை, சிகிச்சைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது” என்று கூறினார்.

விஞ்ஞான ரீதியில் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா முன்னணி தேசமாக உருவாகி வருவதால், இந்தியப் பிரச்சினைகளுக்கு இந்தியாவே தீர்வுகளைக் காண வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மொழி மற்றும் சமூகக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 99 சமூகங்களைச் சேர்ந்த 10,000 ஆரோக்கியமான நபர்களின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதன் மூலம் பல்வேறு இந்திய சமூகத்தினரின் மரபணு மாறுபாடுகளைக் கண்டறிந்து பட்டியலிடுவதற்கான லட்சிய இலக்குக்காக உயிரி தொழில்நுட்பத் துறையை ஜிதேந்திர சிங் பாராட்டினார்.

1.3 பில்லியன் இந்திய மக்கள்தொகை கொண்ட நம் பாரதத்தில் 4,600-க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர், “தற்போதைய மக்கள்தொகையின் மரபணுப் பன்முகத்தன்மைக்கு இந்தக் காரணிகள் பங்களித்துள்ளன. இந்திய மக்கள்தொகை பல மாறுபாடுகளைக் உள்ளடக்கியது. பெரும்பாலும், இந்த குழுக்களில் சிலவற்றில் பல நோய்களை உண்டாக்கும் கூறுகள் உள்ளன. எனவே, மக்கள்தொகை அடிப்படையிலான அல்லது நோய் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை உலகின் பிற இந்தியர்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது” என்று கூறினார்.

இந்திய மரபணுக்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் மக்கள்தொகையில் பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இருக்கும் தனித்துவமான மரபணு மாறுபாடுகளைப் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள உதவும் என்றும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தயாரிக்கவும் அதைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்தது 1,00,000 மரபணுக்களை வரிசைப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே உள்ளது.

Tags: 10000 genes of Indian population sequenced: Union Minister!
ShareTweetSendShare
Previous Post

இனி தமிழகத்தில் திமுகவை தேடினாலும் கிடைக்காது! – பிரதமர் மோடி

Next Post

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கடந்து வந்த பாதை!

Related News

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல முல்தானி பேக்கரியின் உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

ராசிபுரம் அருகே போதமலை சாலைப்பணி 60 சதவீதமே முடிந்த நிலையில் அவசர கதியில் திறப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெசவாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் – தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பட்டா வழங்காத இடத்தில் வீடுகள் இடித்து அகற்றம் – மக்கள் ஆவேசம்!

ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

விளம்பரங்களுக்காக நீதிமன்றம் வரவேண்டாம்! -பிரசாந்த் கிஷோருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

சிவகங்கையில் 2ம் வகுப்பு மாணவனை கடத்தி நகை பறிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies