ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டென் உடன் பங்குபெற்றுள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டென் இணை விளையாடினர். இவர்களுடன் துனிசியாவை சேர்ந்த சிகந்தர் மன்சூரி, பாகிஸ்தானை சேர்ந்த அய்சம் உல்-ஹக் குரேஷி ஜோடி விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் இணை 7-6 , 7-6 என்ற நேர்செட்டில் சிகந்தர் மன்சூரி -அய்சம் உல்-ஹக் குரேஷி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் இணை பங்குபெற்றது. இந்த போட்டியில் இவர்களுடன் கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் புப்லிக் – பிரான்ஸை சேர்ந்த அட்ரியன் மன்னரினோ இணை விளையாடியது.
இந்த போட்டியில் யுகி பாம்ப்ரி – ராபின் ஹாஸ் இணை 6-7 , 6-3, 10-8 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் புப்லிக் – அட்ரியன் மன்னரினோ இணையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
ஒற்றையர் பிரிவில் ‘வைல்டு கார்டு’ சலுகை பெற்றிருந்த இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் 4-6, 7-5, 1-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லோரின்சோ சோங்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.