ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !
Jul 25, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !

Web Desk by Web Desk
Feb 29, 2024, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பொய் கூறியதால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுத்த நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட சொல்லி பி.சி.சி.ஐ வலியுறுத்தியுறுத்தியது.

ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். இவரை போல ஸ்ரேயாஸ் ஐயரையும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பி.சி.சி.ஐ அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும்படி என்.சி.ஏ-விற்கு உத்திரவிட்டிருந்தது.

அதன்படி என்.சி.ஏ மருத்துவர் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இப்படி பொய் கூறியதற்காக இவர்கள் இருவரையும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் கிண்டல் செய்து வருகிறார்கள். இவ்விரு வீரர்களையும் இனி இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ” கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் எவ்வாறு திரும்பி கம் பேக் கொடுக்கிறோம் என்பதில் தான் வெற்றியே இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் கவலைப்படக்கூடாது. கடுமையாக இனி உழையுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

மீண்டும் பலமான வீரராக கம்பேக் கொடுங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு திறமைசாலிகள், என்ன சாதனைகளை படைத்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே எனக்கு கொஞ்சம் கூட உங்கள் மீது சந்தேகமில்லை. நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவீர்கள்” என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி பதிவிட்டுள்ளார்.

Tags: Ravi ShastriBCCIIshan KishanShreyas Iyer
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்!

Next Post

IPL : லக்னோ அணி கேப்டன் அறிவிப்பு !

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies