ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருக்கும் ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பொய் கூறியதால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுத்த நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட சொல்லி பி.சி.சி.ஐ வலியுறுத்தியுறுத்தியது.

ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். இவரை போல ஸ்ரேயாஸ் ஐயரையும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பி.சி.சி.ஐ அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும்படி என்.சி.ஏ-விற்கு உத்திரவிட்டிருந்தது.

அதன்படி என்.சி.ஏ மருத்துவர் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இப்படி பொய் கூறியதற்காக இவர்கள் இருவரையும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் கிண்டல் செய்து வருகிறார்கள். இவ்விரு வீரர்களையும் இனி இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ” கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் எவ்வாறு திரும்பி கம் பேக் கொடுக்கிறோம் என்பதில் தான் வெற்றியே இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் கவலைப்படக்கூடாது. கடுமையாக இனி உழையுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

மீண்டும் பலமான வீரராக கம்பேக் கொடுங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு திறமைசாலிகள், என்ன சாதனைகளை படைத்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே எனக்கு கொஞ்சம் கூட உங்கள் மீது சந்தேகமில்லை. நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவீர்கள்” என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி பதிவிட்டுள்ளார்.

Tags: BCCIIshan KishanShreyas IyerRavi Shastri
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோட்டில் சதமடித்த வெயில்: வானிலை மையம் தகவல்!

Next Post

IPL : லக்னோ அணி கேப்டன் அறிவிப்பு !

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies