சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !
Jul 26, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

Web Desk by Web Desk
Feb 29, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம்  உத்தரவு அளித்துள்ளது.

திருச்சி அருகே  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  முதுமலை தெப்பக்காட்டில் வளர்ந்த யானை மசினியை  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் யானை மசினி வளர்ந்தது. வனப்பகுதியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த யானை, மற்ற யானைகளிடமிருந்து பிரிந்து கோவிலுக்கு வந்தபின் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்த நிலையில், பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தையடுத்து மசினி யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோவில் யானையை, முதுமலை தெப்பக்காட்டு யானைகள் முகாமில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மசினி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமில் சேர்த்து போதிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், யானை தற்போது நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக உள்ளது. யானை பராமரிப்புக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் வனத்துறை அதிகாரிகள் சமயபுரம் கோவில் யானையை தொடர்ந்து பராமரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: Maduraielephantsamayapuram templemudumalai elephant campmadurai high court orders
ShareTweetSendShare
Previous Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

Next Post

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies