சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமயபுரம் கோவில் யானை வழக்கு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என  உயர் நீதிமன்றம்  உத்தரவு அளித்துள்ளது.

திருச்சி அருகே  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு  முதுமலை தெப்பக்காட்டில் வளர்ந்த யானை மசினியை  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் யானை மசினி வளர்ந்தது. வனப்பகுதியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த யானை, மற்ற யானைகளிடமிருந்து பிரிந்து கோவிலுக்கு வந்தபின் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்த நிலையில், பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தையடுத்து மசினி யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோவில் யானையை, முதுமலை தெப்பக்காட்டு யானைகள் முகாமில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மசினி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமில் சேர்த்து போதிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், யானை தற்போது நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக உள்ளது. யானை பராமரிப்புக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் வனத்துறை அதிகாரிகள் சமயபுரம் கோவில் யானையை தொடர்ந்து பராமரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: madurai high court ordersMaduraielephantsamayapuram templemudumalai elephant camp
ShareTweetSendShare
Previous Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதல்!

Next Post

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies