மும்பை சுங்கத் துறையினர் ஐந்து இடைக்கால கஞ்சர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து கத்தி உட்பட 101 பழங்காலப் பொருட்களை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.
2003 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து முகலாயர் கால கஞ்சர்கள் ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டன.
அந்த பழங்கால வாள்களை மும்பை, பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டெல்லி, கவுகாத்தி மற்றும் புனே ஆகிய ஏழு நகரங்களில் உள்ள ASI இன் மண்டல பிரிவுகளுக்கு மொத்தம் 101 பழங்கால பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அரிய புத்தர் கல் சிலை மற்றும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த நான்கு பழங்காலப் பொருட்கள், பெங்களூருவில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுங்கதுறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள் பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்தவிதமான தொல்பொருட்களும் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. இதை மீறி நாட்டின் பழங்கால பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்துவது சட்டவிரோதமாகும்.