இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்கள் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலேவறு நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்தநர். இதன் மதிப்பு சர்வதேச ரூ.2,000 கோடி.
இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுகச் சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.
கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால், அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை டெல்லி போலீசார் தேடி வருகிறார்.
ஆனால், பேலீசாருக்கு பயந்து, ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரது வீட்டிற்குச் சீல் வைத்தனர்.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.