உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் பஞ்சா விஹாரில் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்றும், வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
பாரதம் விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் பெண்களின் தீவிர பங்கேற்புடன் வளர்ந்த நாடாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகையில் 49 சதவீத பெண்கள், நாட்டை மேலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒரு காலத்தில் ஆண்களின் ஏகபோகமாக இருந்த பல துறைகளில் பெண்கள் கால்தடம் பதித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.