கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை, 1434.03 மில்லியன் டன் சரக்குகளை ரயில்வே துறை கையாண்டுள்ளது
ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த அடிப்படையில், ரயில்வே 1434.01 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1367.5 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதனை ஒப்பிடும் போது 66.51 மில்லியன் டன் சரக்குகள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன.
சரக்குப் போக்குவரத்தின் மூலம் இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரயில்வேக்கு ரூ.155557.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.149088.1 கோடியாக இருந்தது.
2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரயில்வே 136.60 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. பிப்ரவரி 2023-ல் இது 124.03 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10.13 சதவீதம் அதிகமாகும். 2023 பிப்ரவரி மாதத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலமான வருவாய் ரூ.13700.75 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரியில் இது ரூ.14931.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வருவாயில் 8.98 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.