முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு முதல்  திறமையாளர்களை அரசில் இணைக்கும் நோக்கத்தில் ‛லேட்டரல் என்ட்ரி’ முறையில் தனியார் துறை நிபுணர்களை இணைச் செயலர், துணை செயலர் மற்றும் இயக்குநர் பதவிகளில், மத்திய அரசு பணியமர்த்தி வருகிறது.இதன் மூலம் அவர்களும் அரசில் ஒரு அங்கமாக மாறுவதுடன், அரசின் கொள்கை முடிவுகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பிரதமர் மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பொதுவாக, இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகளை அகில இந்திய சேவைகள் – இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வனப் பணி உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த முயற்சி புதிய திறமை மற்றும் முன்னோக்கை அரசாங்கத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2021 அக்டோபரில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் (3), இயக்குநர்கள் (19), மற்றும் துணைச் செயலாளர்கள் (9) என 31 பேரை நியமனம் செய்ய ஆணையம் மீண்டும் பரிந்துரை செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 இணைச் செயலாளர்கள் மற்றும் 28 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்கள் உட்பட மொத்தம் 38 தனியார் துறை வல்லுநர்கள் இதுவரை அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

தற்போது, 8 இணைச் செயலாளர்கள், 16 இயக்குநர்கள் மற்றும் ஒன்பது துணைச் செயலாளர்கள் உட்பட 33 நிபுணர்கள் முக்கிய அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும் இரண்டு இணைச் செயலாளர்கள் தங்கள் முழு மூன்றாண்டு பதவிக்காலத்தையும் முடித்துள்ளனர்.

Tags: Narendra Modicentral governmentAppointments Committee of the Cabinet
ShareTweetSendShare
Previous Post

நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

Next Post

ரூ.10,000 கோடி மதிப்பிலான 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிதின் கட்கரி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies