அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள் இன்று!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள் இன்று!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) பிறந்த தினம் இன்று (மார்ச் 3).

ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார் (1847). தந்தை ஒரு பேராசிரியர். குரல் பயிற்சியிலும், காது கேளாதோருக்குக் கல்வி கற்பிப்பதிலும் வல்லுநர்.

இவரது இயற்பெயர் பெல். குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் மேல் உள்ள அபிமானத்தால் இவருக்கு அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வீட்டிலேயே 11 வயது வரை இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. அறிவியல் பாடத்தை விரும்பிப் படித்தார். பியானோ இசைப்பதிலும் ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் முழு நேரத்தையும் செலவிட்டார்.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவு அனுப்பினார். பேசுவதையும் அதே முறையில் அனுப்பலாமே என்ற சிந்தனையை நிஜமாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன.

பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1876-ல் உலகிலேயே முதன் முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார்.

பெல் பேசிய சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது. ஃபிலடல்ஃபியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார்.

அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திப் பார்த்தார். அதன் பிறகுதான் இவரது தொலைபேசியின் புகழ் பரவியது.

இதற்கான காப்புரிமை பெற்றார். 25-வது வயதில் பாஸ்டனில் காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக ஒரு பள்ளியை நிறுவினார். 1877-ம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியைத் தொடங்கினார்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேச்சு உடலியல் மற்றும் பேச்சுத் திறன் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தொலைபேசி கண்டுபிடிப்புக்காக பிரெஞ்சு அரசு வழங்கிய பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். குரலைப் பதிவு செய்யும் ஒலித் தகடுகளை உருவாக்கினார்.

1882-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். 1885-ல் தனது குரலை மெழுகு தடவிய கார்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார். அது இன்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பேசவும் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்குமான முறைகளை மேம்படுத்தினார்.
கண்பார்வையற்ற, காதுகேளாத, பேச முடியாமல் தவித்த சாதனையாளர் ஹெலன் கெல்லர், பேச்சுத்திறனை வசப்படுத்திக்கொண்டதில் பெரும் பங்காற்றினார்.

போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர், உள்ளிட்ட ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார்.

உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கியதுடன், அவர்கள் துயரைக் களைவதற்கான பல அமைப்புகளையும் தொடங்கினார்.

வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.

Tags: Today is Alexander Graham Bell's birthday!
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!

Next Post

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் பாஜக தொகுதி பங்கீடு ஆலோசனை!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies