புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. இங்கு பிரசித்தி பெற்ற நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே, பிரம்மோற்சவ விழா மார்ச் மாதம் 3 -ம் தேதி துவங்கும் என அறிவிக்க்கப்பட்டது. அதுபோலவே, விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை 9 முதல் 10.30 -க்குள் கொடிமறத்திற்குச் சிறப்புப் பூஜை தொடங்குவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கொடியேற்றிய போது கொடிமரம் திடீரென முறிந்து சேதமடைந்தது. இதனால், பிரம்மோற்சவ விழா நிறுத்தப்பட்டது. விழா நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.