அடுத்த இரு தினங்களில் தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
அடுத்த இரண்டு நாட்களில் தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
Over the next two days, I will be attending various programmes in Telangana, Tamil Nadu, Odisha and West Bengal. The development works which will be inaugurated cover a wide range of sectors and will transform several lives. https://t.co/dNp6tLs26e
— Narendra Modi (@narendramodi) March 3, 2024
மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் தமிழக பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.