WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Jul 26, 2025, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 11வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பபந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்தார். அதேபோல் எல்லிஸ் பெர்ரி 4 சிக்சர்கள் மற்றும் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 37 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார்.

மேகனா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 21 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

உ.பி. வாரியர்ஸ் அணியில் அஞ்சலி, தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் உ.பி. அணிக்கு 199 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணியில் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் கிரண் நவ்கிரே விளையாடினர்.

இதில் கிரண் நவ்கிரே 18 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலிசா ஹீலி 7 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதேபோல் தீப்தி சர்மா 33 ரன்களிலும், பூனம் 31 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் உ.பி. அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணியில் சோபான, ஜார்ஜியா, மோலினக்ஸ் மற்றும் டேவின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்த ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLwomens cricket
ShareTweetSendShare
Previous Post

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

Next Post

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies