கருக்கலைப்பை அரசியலமைப்பு உரிமையாக்கிய பிரான்ஸ்!
Mar 15, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருக்கலைப்பை அரசியலமைப்பு உரிமையாக்கிய பிரான்ஸ்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஆனது, பிரான்சின் பெருமை மற்றும் உலக நாடுகளுக்கான செய்தி என இமானுவேல் மேக்ரான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய பாரிஸில் கூடியிருந்த கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்தை உற்சாகமாக வரவேற்றனர். நாடாளுமன்றத்தின் வாக்களிப்பின் முடிவு மாபெரும் திரையில் அறிவிக்கப்பட்டபோது “MyBodyMyChoice” என்ற செய்தியைக் காட்டியதும் அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பிரான்ஸ் இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது.

பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள, பெண்கள் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.

அதில், கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம் இதுவாகும். 2008ம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும்.

இதனை கொண்டாடும் விதமாக பாரிஸில் உள்ள ஈஃபிள் டவரில் “மை பாடி மை சாய்ஸ்” என்ற வாசகம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

Tags: France made abortion a constitutional right!
ShareTweetSendShare
Previous Post

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

Next Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசத்திற்கு 64 ஆயிரத்து 400 டன் வெங்காயம் ஏற்றுமதி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies